பிரபல இசையமைப்பாளர் விஷம் வைத்து கொலை? மனைவி புகாரில் அதிர்ச்சி...!!

தெலுங்கு சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் சக்ரி. இவர் சில மாதங்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக இறந்தார்.

ஆனால், இவரது மரணத்தில் தனக்கு சந்தேகம் இருப்பதாக அவருடைய மனைவி ஸ்ராவனி ஜதராபாத் ஜூப்லிஹில்ஸ் போலிஸாரிடம் புகார் கொடுத்துள்ளார்.

இதில் ‘என் கணவருக்கும் அவருடைய தாயாருக்கும் நீண்ட நாட்களாக சண்டை, மேலும் அவர் தங்கையின் கணவர் தொழில் தொடங்குவதற்கு ரூ. 45 லட்சம் கொடுத்தார். பின் பணத்தை திருப்பி கேட்ட போது, என் மாமியாருக்கு என் கனவரை சுத்தமாக பிடிக்கவில்லை.டிசம்பர் 14–ந்தேதி இரவு எனது மாமியார் அழைத்ததின் பேரில் எனது கணவர் சக்ரி சென்றார்.

புறப்படும் போது மிகவும் சந்தோஷமாக காணப்பட்டார். ஆனால் இரவு 1.30 மணிக்கு வீடு திரும்பிய போது மிகவும் சோர்வாக இருந்தார், சகோதரி வீட்டிலேயே சாப்பிட்டு விட்டதாக கூறினார்.மறுநாள் அவர் எழுந்திருக்கவே இல்லை, என் கணவர் இறந்த பின் என் மாமியார் என்னை மிகவும் கொடுமை செய்ய ஆரம்பித்து விட்டார்.



எனவே என் கணவர் மரணத்தில் எனக்கு சந்தேகம் வந்துள்ளது. கண்டிப்பாக அவர்கள் விஷம் வைத்து தான் கொலை செய்துள்ளார்கள்’ என்று அவர் புகார் கொடுத்துள்ளார்.